ராணுவத்தை அழைப்பேன், வெளியே நடமாடினால் கண்டதும் சுட உத்தரவு: முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்

நேற்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை அனைத்து இந்திய மக்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் மற்றும் மாநில முதலமைச்சர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் சற்று கடுமையான எச்சரிக்கையை தமது மாநில மக்களுக்கு விடுத்துள்ளார். மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவை தெலுங்கானா மாநில மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு கடைபிடிக்கவில்லை என்றால் பொதுமக்களை வீட்டுக்குள் முடக்கி வைக்க இராணுவத்தை அழைக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்

அதுமட்டுமின்றி அமெரிக்காவைப் போல் சட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வந்தால் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்

நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் தெலுங்கானா மாநிலத்தில் பலரும் சாலைகளில் எந்தவித பயமுமின்றி நடமாடி வருகின்றனர் என்றும் கொரோனா வைரஸ் குறித்த சீரியஸ் இன்னும் மக்களுக்கு புரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகி இருந்ததை அடுத்து, முதல்வர் இந்த கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்: கமல்ஹாசன்

கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே தற்போது பெரும் போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாட்டு அரசும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பது எப்படி என்று புரியாமல் தவித்து வருகிறது

சென்னையைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் ஏற்கனவே 15 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

கொரோனா; அடுத்த 3 மாதங்களுக்கு ATMகளில் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்!!!

கொரோனா பரவலைத் தடுக்க அடுத்த 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தி உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் பலி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம் மோசமானாலும் பரவாயில்லை, எனக்கு மக்கள் தான் முக்கியம்: பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடைந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு என் நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம் என்று பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்குடன் பேசியுள்ளது