close
Choose your channels

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்: கமல்ஹாசன்

Wednesday, March 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே தற்போது பெரும் போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாட்டு அரசும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பது எப்படி என்று புரியாமல் தவித்து வருகிறது. இப்போதைக்கு மனித இனத்திற்கு இருக்கும் ஒரே வழி வீட்டில் முடங்கிக் கிடப்பது மட்டுமே

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வீட்டில் முடங்கி கிடப்பதை தவிர வேறு வழியில்லை என்பதால் இந்த ஒரே வழியை அனைத்து அரசுகளும் கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் இந்தியாவில் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என பிரதமர் நேற்று அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க இந்த ஒரு வழியைத் தவிர வேறு வழி இல்லை என்றும் பொருளாதாரம் எவ்வளவு சீரழிந்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும் மக்களின் உயிர் தான் தனக்கு முக்கியம் என்றும் அதனால் அனைத்து இந்திய மக்களும் 21 நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்து ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார்

இந்த நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பற்றி கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்

கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் கமெட்டில் பதிவாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.