லாக்டவுனால் வேலையில்லை: விபரீத முடிவு எடுத்த காதல் ஜோடி!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து, வருமானம் இழந்து உள்ளனர் என்பதும் பலர் வேலை இல்லாமல் வறுமை காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ள சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி வேலையில்லாததால் கொடைக்கானலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானாவை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்ற 25 வயது இளைஞர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்த நந்தினி என்ற பெண்ணை அவர் காதலித்தார். ஆனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தெலுங்கானாவில் ரிஜிஸ்டர் திருமணம் செய்துகொண்டு வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு கொடைக்கானல் வந்தனர்

கொடைக்கானலில் உள்ள காட்டேஜ் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வெளிநாடு உட்பட பல இடங்களுக்கு வேலைக்கு அப்ளை செய்தனர். இந்த நேரத்தில் திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் நான்கு மாதங்களாக இருவருக்குமே வேலை கிடைக்கவில்லை. செலவுக்கும் காசு இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல கூட முடியாமல் சிக்கலில் இருந்தனர்.

இந்த நிலையில் நந்தினிக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. உதவிக்கும் யாருமே இல்லை என்பதால் மனமுடைந்த இருவரும் காபியில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர் 

காட்டேஜில் இருந்த காதல் ஜோடி இரண்டு நாளாக வெளியே வராததை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் சடலமாக இருந்தனர். அதன்பின் காவல்துறையினர் இரண்டு உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி, தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

லாக்டவுன் காரணமாக வேலை இழந்த காதல் ஜோடி, நல்ல வேலை கிடைத்தும் கையில் காசு இல்லாததால் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியாத நிலைமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

More News

கதவை மூடாமல் சென்ற காரின் ஓனர்: 3 சிறுமிகள் பரிதாப பலி!

காரின் கதவை மூடாமல் சென்ற காரில் ஓனரால் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

கொரோனா, புபோனிக் பிளேக்கைத் தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று!!! பதற வைக்கும் தகவல்!!!

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது.

இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்த 42 வயது பெண்: நேரில் பார்த்த கணவரால் ஏற்பட்ட விபரீதம்

42 வயது பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் கள்ள தொடர்பு இருந்ததை நேரில் பார்த்த கணவன் செய்த கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ஆஜர்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்