எனக்கு தமிழ் சொல்லி தாருங்கள்: தமிழ் நடிகரிடம் வேண்டுகோள் விடுத்த அக்சய்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ என்ற தமிழ் படத்திலும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகருமான அக்சய்குமார் தற்போது ’பெல்பாட்டம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஸ்காட்லாண்டில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் நடித்து வருகிறார். கொரனோ வைரஸ் பாதிப்பிற்கு பின் தொடங்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவத்தையும் சமீபத்தில் தலைவாசல் விஜய் பேட்டி அளித்துள்ளார். நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லும்போது ஒரு வாட்ச் ஒன்றை கட்டிக் கொண்டு செல்வோம். அதில் இதயத்துடிப்பு, ஆக்சிஜன் லெவல், ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை உள்ளிட்ட அனைத்தும் தெரியவரும்

மேலும் படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் மாஸ்க் அணிந்து இருப்போம். எங்களை பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது. எங்களுடைய செட்டில் எப்பொழுதும் ஒரு டாக்டர் இருப்பார். படப்பிடிப்பு செட் முழுவதும் தினமும் சானிடேஷன் செய்யப்பட்டது என்று அவர் படப்பிடிப்பு பாதுகாப்பு குறித்து கூறினார்

மேலும் அக்சய்குமார் குறித்து அவர் கூறியபோது ’அக்சய்குமார் அவர்களுடன் நான் பழகும் போது அவரிடம் இருந்த எளிமையை கண்டு ஆச்சரியப்பட்டேன். நான் என்னுடைய குழந்தைகள் நீச்சல் சாம்பியன்கள் என்று கூறியதை கேட்டு அவர் ஆச்சரியமடைந்தார். மேலும் அவர் தனக்கு சில தமிழ் வார்த்தைகளை சொல்லிக் கொடுக்கும்படி எனது கேட்டுக்கொண்டார். நானும் சொல்லி கொடுத்தேன். முதல்முதலாக அக்சய்குமார் அவர்களுடன் இணைந்து நடித்தபோது எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது’ கூறினார். தலைவாசல் விஜய்யின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது

More News

நட்புக்கரம் நீட்டிக்கொண்டே டிக் டாக்கிற்கு முடிவுக்கட்டிய பாகிஸ்தான்… தெறிக்கவிடும் பின்னணி!!!

ஒழுக்கக் கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியிடுப்படுவதாகக் கூறி பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று டிக் டாக் செயலிக்கு தடை விதித்து இருக்கிறது.

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உயர்வு!!! தளர்வுகள் காரணமா???

சென்னையில் கடந்த மே, ஜுன் மாதங்களில் கொரோனா தாக்கம் காரணமாக அதிக இடங்கள் சீல் வைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக, சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது.

விஜய்சேதுபதி-விமல் இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்

விஜய் சேதுபதி மற்றும் விமல் ஆகிய இருவரும் திரையுலகில் வருவதற்கு முன்னர் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது தெரிந்ததே. தற்போது தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி, விமல்

சென்னைக்குச் சவால் விடும் அந்த மூன்று பேர்!

ஐபிஎல் கிரிக்கெட்  தொடரின் 25ஆவது லீக் போட்டியில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

'எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா': விஜய்சேதுபதி வெளியிட்ட போஸ்டர்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 'எனக்கு இந்தி தெரியாது போடா' என்ற வாசகங்கள் கொண்ட டிசர்ட்டுகளை பிரபல திரையுலக நட்சத்திரங்கள் அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே