ரஷ்யாவுக்கு அல்ல.. திடீரென வேறொரு நாட்டிற்கு கிளம்பி சென்ற விஜய்.. 'கோட்' அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறும் என்று கூறப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக தற்போது விஜய் உட்பட இந்த படத்தின் குழுவினர் துபாய் சென்று இருப்பதாகவும் அங்கு தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துபாயில் ஒரு சில ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இதனை அடுத்து ஏப்ரல் 19ஆம் தேதிக்கு முன்பே விஜய் உட்பட குழுவினர் சென்னை திரும்பி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் தேர்தலில் வாக்களித்தவுடன் மீண்டும் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் அங்கு சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டவுடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் டப்பிங் உள்பட மற்ற தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வரலாம் என்றும் அதேபோல் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளிலும் ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com