சென்னை திரும்பிய தளபதி விஜய்.. தாய்லாந்து படப்பிடிப்பில் நடந்தது என்ன?


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது என்பதை பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சில ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நேற்று திடீரென தளபதி விஜய் சென்னை திரும்பி உள்ளார். அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் காட்சிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து தாய்லாந்து படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையில் தான் நடைபெற இருப்பதாகவும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தளபதி விஜய்யுடன் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments