சாய்பாபா கோவிலுக்கு சென்ற தளபதி விஜய்.. புகைப்படத்தை உடனே நீக்கியதற்கு என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,April 08 2024]

தளபதி விஜய் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் ஒரு சில நிமிடங்களில் அந்த புகைப்படம் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் சமீபத்தில் துபாய் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து இன்னும் ஒரு சில நாட்களில் அவர் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் அவர் சாய்பாபா கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் விஜய் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கப் போகிறாரா? இந்துவாக மாறிவிட்டாரா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பிய நிலையில் விஜய் தரப்பில் இருந்து வந்த தகவல் காரணமாக இந்த புகைப்படம் உடனே நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனது கட்சியின் கொள்கை ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மதத்தைச் சார்ந்த புகைப்படம் தேவையில்லாத பிரச்சனையை, நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் விஜய் இந்த புகைப்படத்தை உடனே நீக்க சொன்னதாக கூறப்படுகிறது. இருப்பினும் புகைப்படம் ஏற்கனவே வைரலாகி விட்ட நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு சர்ச்சையாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு சம்பவம்: ரஜினியின் 'தலைவர் 171' ப்ரோமோ பார்த்த பிரபலம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 171' படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த வீடியோவை

அடுத்தடுத்து பாலித்தீவு செல்லும் 'எதிர்நீச்சல்' நடிகைகள்.. படப்பிடிப்பு ரத்தா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் அடுத்தடுத்து சுற்றுலா செல்வதை பார்க்கும் போது 'எதிர்நீச்சல்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா

தியானம் மூலம் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி? , யோகா & தியான ரகசியங்கள்

புகழ்பெற்ற தியான பயிட்சியாளர் பரம்ஸ்ரீ சூரத், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தியானம் மற்றும் யோகா மூலம் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி விரிவாக விளக்குகிறார்.

மண்ட மேல கம்பால போட்ட அர்ச்சனா கல்பாத்தி.. கையெடுத்து கும்பிட்ட வெங்கட் பிரபு..!

'கோட்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கம்பை எடுத்து வெங்கட் பிரபு தலையில் போட அதற்கு அவர் கையெடுத்து கும்பிட்டு உள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்த விவகாரம்.. நீதிமன்றத்தில் இருவரும் சேர்ந்து மனு தாக்கல்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்த நிலையில் தற்போது சட்டப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் இருவரும்