close
Choose your channels

சாய்பாபா கோவிலுக்கு சென்ற தளபதி விஜய்.. புகைப்படத்தை உடனே நீக்கியதற்கு என்ன காரணம்?

Monday, April 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் ஒரு சில நிமிடங்களில் அந்த புகைப்படம் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் சமீபத்தில் துபாய் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து இன்னும் ஒரு சில நாட்களில் அவர் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் அவர் சாய்பாபா கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் விஜய் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கப் போகிறாரா? இந்துவாக மாறிவிட்டாரா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பிய நிலையில் விஜய் தரப்பில் இருந்து வந்த தகவல் காரணமாக இந்த புகைப்படம் உடனே நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனது கட்சியின் கொள்கை ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மதத்தைச் சார்ந்த புகைப்படம் தேவையில்லாத பிரச்சனையை, நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் விஜய் இந்த புகைப்படத்தை உடனே நீக்க சொன்னதாக கூறப்படுகிறது. இருப்பினும் புகைப்படம் ஏற்கனவே வைரலாகி விட்ட நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு சர்ச்சையாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.