திடீரென பிரேமலதாவை சந்திக்க இருக்கும் தளபதி விஜய்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,April 16 2024]

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை தளபதி விஜய் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பு இன்னும் சில நாட்களில் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் தமிழக முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக கூட சமீபத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் பிரேமலதாவை தளபதி விஜய் மற்றும் ’கோட்’ பட இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ’கோட்’ படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் சில காட்சிகள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக பிரேமலதாவிடம் அனுமதி பெறுவதற்காக இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சார பணிகள் முடிவடைந்ததும் வெங்கட் பிரபு மற்றும் விஜய்யை சந்திக்க பிரேமலதா ஒப்பு கொண்டிருப்பதாகவும் எனவே இந்த சந்திப்பு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பிரேமலதா ஒப்புக்கொண்டால் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட ஏஐ காட்சிகள் ’கோட்’ படத்தில் இடம்பெறும் என்றும் அது அந்த படத்திற்கு ஒரு மாஸ் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய் மற்றும் விஜயகாந்த் இணைந்து ’செந்தூரப் பாண்டி’ திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ’கோட்’ படத்திலும் மறைவுக்கு பின்னர் ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்த், விஜய்யுடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தக்லைஃப்' படத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்.. மறுபடியும் முதல்ல இருந்தா?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இணைந்த 'தக்லைஃப்' படத்தில் திடீரென ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீக்கிரமே உலக அழகி பட்டத்தை வெல்வேன்-கருப்பு தமிழச்சி சான் ரேச்சல்

ரேச்சல் போன்ற பெண் பல தடைகளை உடைத்து எரிந்து வரும்போது இது போல பல பெண்கள் தனது வாழ்க்கை இலக்கை நோக்கி ஒரு படி முன் செல்ல நல்லதொரு உந்துதலாக இருக்கும்...

சம்மருக்கு இதுதான் சரியான டிரஸ்.. பீச் பேபியாக மாறிய மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் கடலோர பகுதியில்

முதிர்ந்த வயதில் IVF மூலம் குழந்தை பெற்று கொள்வது ஆபத்தானதா ?

இந்த தொழில்நுட்ப காலத்தில் சாத்தியம் இல்லாத ஒன்றே இல்லை என்பதை உணர்ந்து தோல்வி கண்ட அனைவரும் மீண்டும் IVF முறையை மேற்கொள்ளலாம்...

தேர்தலுக்குப் பின் மீதமுள்ளோருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை: உறுதியளித்த கதிர் ஆனந்த்

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் முடிந்தவுடன் ரூ.1000 உரிமை தொகை இதுவரை கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளார்.