close
Choose your channels

திடீரென பிரேமலதாவை சந்திக்க இருக்கும் தளபதி விஜய்.. என்ன காரணம்?

Tuesday, April 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை தளபதி விஜய் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பு இன்னும் சில நாட்களில் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் தமிழக முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக கூட சமீபத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் பிரேமலதாவை தளபதி விஜய் மற்றும் ’கோட்’ பட இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ’கோட்’ படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் சில காட்சிகள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக பிரேமலதாவிடம் அனுமதி பெறுவதற்காக இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சார பணிகள் முடிவடைந்ததும் வெங்கட் பிரபு மற்றும் விஜய்யை சந்திக்க பிரேமலதா ஒப்பு கொண்டிருப்பதாகவும் எனவே இந்த சந்திப்பு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பிரேமலதா ஒப்புக்கொண்டால் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட ஏஐ காட்சிகள் ’கோட்’ படத்தில் இடம்பெறும் என்றும் அது அந்த படத்திற்கு ஒரு மாஸ் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய் மற்றும் விஜயகாந்த் இணைந்து ’செந்தூரப் பாண்டி’ திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ’கோட்’ படத்திலும் மறைவுக்கு பின்னர் ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்த், விஜய்யுடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.