தாமரையின் கணவர் இந்த கடையில் தான் வேலை பார்க்கின்றாரா? வைரல் புகைப்படம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்வி ஒரு சில வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அவர் தனது அப்பாவித்தனத்தை மட்டுமின்றி ஆங்காங்கே தனது புத்திசாலித்தனத்தையும் காட்டி சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 20 போட்டியாளர்கள் கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பதே பெரிய சாதனை தான் என்பதும், போகிற போக்கை பார்த்தால் அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 4 போட்டியாளர்களில் ஒருவராக கூட வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க்கில் தாமரை தனது கடந்த கால வாழ்க்கையை தெரிவித்திருந்தார் என்பதும் முதல் கணவர் செய்த கொடுமையின் காரணமாக அவரை விட்டு பிரிந்து வந்து விட்டதாகவும், அதன்பின் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தனது மாமியார் தனக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாகவும், தன்னை மகள் போல் பார்த்து கொண்டதாகவும் கூறினார்.

இருப்பினும் தனது மகனை முதல் கணவரின் குடும்பத்தினர் தன்னுடன் சேரவிடவில்லை என்றும் எனது மகனைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் அவர் கண்ணீருடன் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தாமரை மகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை அடுத்து தாமரை மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தாமரையின் கணவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாமரையின் கணவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார் என்ற தகவல் தற்போது புகைப்படத்துடன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் 'தி ஃபேமிலிமேன் 2' இயக்குனருடன் இணையும் சமந்தா: ஹீரோ இந்த பிரபலமா?

சமந்தா நடித்த 'தி ஃபேமிலிமேன் 2' என்ற வெப்தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் அந்த தொடரின் இயக்குனருடன் சமந்தா இணைந்து உள்ளதாகவும்,

நடிகர் வடிவேலு தனியார் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 

இப்ப உனக்கு சந்தோஷமா? ஆனந்தக்கண்ணீருடன் மகளை கேட்கும் போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தனது மகளிடம் இப்போது உனக்கு சந்தோஷமா? என போட்டியாளர் கேட்கும் காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கோடி பணம் இன்னும் கைக்கு வரல்ல, அதுக்குள் இப்படியா? விஜயலட்சுமி விரக்தி!

சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கான ஒரு கோடி ரூபாய் பரிசு பணம் இன்னும் கைக்கு வரவில்லை என்றும், அதற்குள் தன்னை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் நடிகை விஜயலட்சுமி

இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.