close
Choose your channels

மன்சூர் அலிகான் பெண்களை இப்படி பார்ப்பது வெட்கக்கேடானது: 'தங்கலான்' நடிகை ஆவேசம்..!

Sunday, November 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ‘தங்கலான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை தனது சமூக வலைதளத்தில் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தில் த்ரிஷா மற்றும் மன்சூர் அலிகான் ஆகிய இருவரும் நடித்திருந்தாலும், இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் இல்லை. இந்த நிலையில் இதுகுறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்தார். மேலும் ‘லியோ’ இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகவும் அருவருப்பாக உள்ளது என்றும் அவர் பெண்களை இப்படி பார்ப்பது மிகவும் வெட்கக்கேடானது என்று தெரிவித்தார்

மேலும் தான் பேசியதன் பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் வெளிப்படையாகவும் குற்ற உணர்வு இன்றியும் அவர் பேசுவதை பார்க்கையில் அவமானமாக உள்ளது’ என்றும் மாளவிகா மோகனன் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos