இயக்குனர் 'மர்மதேசம்' நாகாவுக்கு என்ன ஆச்சு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உறவினர்கள்..!

  • IndiaGlitz, [Friday,June 09 2023]

பிரபல இயக்குனர் ’மர்மதேசம்’ நாகா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக அவருடைய தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த 90களில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்கள் இயக்கியவர் இயக்குனர் நாகா. குறிப்பாக ’மர்மதேசம்’ என்ற தொலைக்காட்சி தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’ரகசியம்’ ’விடாது கருப்பு’ ’சிதம்பர ரகசியம்’ ’யாமிருக்க பயமேன்’ உட்பட பல சீரியல்கள் அவர் இயக்கி உள்ளார் என்பதும் ’ஆனந்தபுரத்து வீடு’ என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் வெப் தொடர் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும் சர்ஜரிக்கு பின்னர் அவர் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் இருப்பதாகவும் அவருடைய தரப்பினர் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் ’மர்மதேசம்’ நாகா காலமாகி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் அந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

நடிகை கஜோலுக்கு என்ன ஆச்சு? திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கஜோல் கடினமான சோதனையில் இருப்பதாகக் கூறி அனைத்துச் சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

லண்டன் சென்று கிரிக்கெட் மேட்ச் பார்த்த தமிழ் இயக்குனர்.. கும்ப்ளேவுடன் சந்திப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியை தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் நேரில் பார்த்த புகைப்படத்தை

அனிருத்தை அடுத்து யுவன்ஷங்கர் ராஜா.. இளம் நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

இளம் நடிகரான கவின் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாக தகவல்

கீர்த்தி சுரேஷின் கழுத்தை பிடித்து நெரிக்கும் சிரஞ்சீவி.. படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு..!

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, நடிகை கீர்த்தி சுரேஷின் கழுத்து பிடித்து நெரிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

போதையில் 6 வயது மகளையே கோடாரியால் வெட்டிய தந்தை … கேரளாவில் கொடூரம்!

கேரள மாநிலத்தில் போதையில் இருந்த தந்தை ஒருவர் தனது இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த 6 வயது மகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது