எஸ்பிபி குறித்து ஊடகங்களில் தவறான செய்தி: எஸ்பிபி சரண்

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டபின்னரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை எஸ்பிபி சரண் அவர்கள் மறுத்துள்ளார்.

எஸ்பிபி அவர்களுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்திருக்கும் தகவல் தகவல் தவறு என்றும் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எஸ்பிபி அவர்கள் குறித்து உடல் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நேரடியாக என்னிடம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவருடைய லேட்டஸ்ட் அப்டேட்களை நான் கூறுகிறேன் என்றும், தயவு செய்து ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் எஸ்பிபி அவர்கள் குணமாக பிரார்த்தனை செய்து வரும் அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் ஒருமுறை தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

அரசு மருத்துவமனைக்கு மாற்றியது ஏன்? வடிவேல் பாலாஜி உறவினர்கள் விளக்கம்!

பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி அவர்கள் இன்று மதியம் திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேல் பாலாஜி மறைவு குறித்து தனுஷ் டுவீட்!

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி அவர்கள் திடீரென இன்று உடல் நலக்குறைவால் காலமான செய்தி சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி பெரிய திரையில் உள்ள நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

வடிவேல் பாலாஜியுடனான மலரும் நினைவுகள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் கோளாறு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தி சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கடைசியா ஒருமுறை அவரை பார்க்க கூட முடியலையே: மைனா நந்தினி உருக்கம்

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி இன்று திடீரென உடல்நலக் குறைவால் காலமான செய்தி தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை!!! எந்த மாவட்டத்திற்கு அதிக பாதிப்பு தெரியுமா???

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்