close
Choose your channels

அரசு மருத்துவமனைக்கு மாற்றியது ஏன்? வடிவேல் பாலாஜி உறவினர்கள் விளக்கம்!

Thursday, September 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி அவர்கள் இன்று மதியம் திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் வடிவேல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் உறவினர்கள் மேலும் கூறியபோது, ‘வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சையாலேயே அவர் உயிரிழந்தாகவும் பணம் இல்லாததால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது என்றும் அவரது சிகிச்சைக்காக சுமார் 20 லட்சம் வரை செலவு செய்தும் காப்பாற்ற முடியவில்லை என வேதனையாக இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் பணத்தை பறிக்கவே தனியார் மருத்துவமனை முயற்சி மேற்கொண்டதாலேயே இறுதியில் அரசு மருத்துவமனையை நாடி சென்றோம் எனவும் அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.