close
Choose your channels

போதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகையின் சகோதரர் கைது!

Monday, June 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரபல நடிகையின் சகோதரர் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தார்த் கபூர் பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த விருந்தில் நேற்றிரவு கலந்து கொண்டார். இந்த விருந்தின்போது அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் சித்தார்த் கபூர் உள்பட 6 பேர் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஷ்ரத்தா கபூர் மற்றும் சித்தார்த் கபூர் ஆகிய இருவரும் பிரபல பாலிவுட் நடிகர் ஷக்தி கபூரின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு அதன் பின் அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.