வித்யாபாலனின் முதல் தென்னிந்திய திரைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,July 04 2018]

தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவர். திருமணத்திற்கு பின்னரும் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் வித்யாபாலன். இவரது பெற்றோர்கள் தமிழர்கள் என்றாலும் இவர் இதுவரை தமிழ்ப்படம் உள்பட தென்னிந்திய படங்களில் நடித்ததில்லை.

இந்த நிலையில் வித்யாபாலன் முதன்முதலாக ஒரு தென்னிந்திய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் முன்னாள் ஆந்திரபிரதேச மாநில முதல்வர் என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் என்.டி.ஆர் கேரக்டரில் அவரது மகன் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா நடித்து வருகிறார்

இந்த நிலையில் என்.டி.ஆரின் மனைவி பசவ தராகம் கேரக்டரில் வித்யாபாலன் நடிக்கவுள்ளார். வித்யாபாலன் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் ஏற்கனவே சாவித்திரி கேரக்டரில் நடித்த கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது,. கீர்த்திசுரேஷ் மட்டுமின்றி இந்த படத்தில் சுமந்த், வெங்கடேஷ், மகேஷ்பாபு , ராணா டக்குபாய் ஆகியோர்களும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.

கிருஷ் இயக்கும் இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைக்கின்றார். இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாரானாலும் தமிழிலும் டப் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

தல ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி செய்தி

'தல' என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி'

சூர்யா படத்தில் ஆர்யா! உறுதி செய்த ஆனந்த்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே மோகன்லால்,

கார்த்தியின் அடுத்த படத்தில் 'டிக் டிக் டிக் 'நாயகி

கார்த்தி நடித்து முடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.

கள்ளநோட்டு விவகாரம்: டிவி சீரியல் நடிகை குடும்பத்துடன் கைது

கள்ளநோட்டை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக பிரபல மலையாள தொலைக்காட்சி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1168 அடியில் ரிஸ்க் எடுத்த த்ரிஷா

நடிகை த்ரிஷா தற்போது அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 'வட அமெரிக்கா விருதுகள் விழா'வில் கலந்து கொண்ட த்ரிஷா