close
Choose your channels

பிக்பாஸ் 2: பைனல்ஸ்க்கு நாம ரெண்டு பேரும்தான்: சொல்பவர் யார் தெரியுமா?

Tuesday, June 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் அதன் புரமோ வீடியோ இருந்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் 'நாம ரெண்டு பேரும் தான் பைனல்ஸ்க்கு போக போகிறோம்' என்று கூறிய நபர் யார் என்பதை பார்ப்போம்

பிக்பாஸ் வீட்டில் எந்த நேரமும் ஜாலியாக இருப்பவர்கள் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தான். இவர்களை மற்ற போட்டியாளர்கள் இரட்டை பேய்கள் என்று கூட விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் யாருடைய விமர்சனங்களையும் காதில் வாங்கி கொள்ளாமல் இருவரும் இந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திட்டமிடுகின்றனர். நாம ரெண்டு பேரும் விளையாட்டு பிள்ளைங்க என்றும் சீரியஸ் முகமே கிடையாது என்றும் எல்லோரும் யோசித்து வச்சிருக்காங்க. ஆனா டைம் வரும்போது நம்ம சீரியஸ் முகத்தை காண்பிக்க வேண்டும் என்று யாஷிகா கூற, அதற்கு ஐஸ்வர்யா, ''நாம ரெண்டு வாரம் எதுவுமே பண்ண கூடாது, பைனல்ஸ்க்கு நாம ரெண்டு பேரும்தான் போறோம்' என்று கூறுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் அணி அணியாக பிரிய ஆரம்பித்துவிட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.