கொரோனாவால் பலியான இரண்டாவது இந்தியர்: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக இந்த வைரஸ் பரவியது வருவது மட்டுமின்றி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் சுமார் 80 பேர்கள் வரை கொரோனா வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூரை சேர்ந்த 76 வயது முகமது சித்திக் என்பவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார் என்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த இரண்டாவது நபர் குறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மறைந்த 69 வயது பெண்ணின் மகன் கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்ட இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்துக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்பியதாகவும், இதனையடுத்து அவருக்கும் அவருடைய தாயாருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி தாயார் மட்டும் மரணம் அடைந்தார்.

இருப்பினும் அந்த பெண்ணின் மகன் கொரோனாவில் இருந்து தற்போது மீண்டு வருவதாக டெல்லி மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் இரண்டு உயிர்கள் பலியாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

பைத்தியக்காரன், மடையன், முட்டாள்: இயக்குனர் பேரரசு குறிப்பிடுவது யாரை?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்துதான் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் செய்தியாகவும் விவாதமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது

5 லட்ச ரூபாய் கொடுத்தால் ரஜினி குறித்து கருத்து கூறுவேன்: பிரபல நடிகர் நிபந்தனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டங்கள் குறித்தும் கொள்கைகள் குறித்தும், தனது அரசியல் கட்சி எப்படி செயல்படும் குறித்தும்,

ரஜினியை திடீரென சந்தித்த கலைப்புலி எஸ்.தாணு: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்ற விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் செய்தியாளர்களை

கொரோனா எதிரொலி: தன்னை யாரும் நெருங்காமல் இருக்க இத்தாலி நபரின் பலே யோசனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது சீனாவை அடுத்த இத்தாலியில் மிக அதிகமான உயிர்ப்பலிகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டு வருகின்றன.

விஷாலின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி தொடக்கம்!

விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன் 2' படத்தின் பிரச்சனை குறித்து விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையே ஒரு பக்கம் நீண்டு கொண்டிருக்கும் நிலையில்