பார்த்திபனின் அடுத்த பட டைட்டிலை வெளியிட்ட இயக்குனர் இமயம்!

  • IndiaGlitz, [Wednesday,January 01 2020]

நடிகர், இயக்குனர் பார்த்திபன் மட்டுமே நடித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட முக்கிய திரையுலக பிரபலங்கள் அனைவரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஒத்த செருப்பு’ திரைப்படத்தை அடுத்து இயக்குனர் பார்த்திபன் நடித்தி இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’இரவின் நிழல்’ என்ற கவிதைத்தனமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் வெளியிட்டு, பார்த்திபனுக்கு தனது வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஒத்த செருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழக இயக்குனர் வரிசையில் இருந்து உலக இயக்குனர் வரிசைக்கு தன் உயரத்தை உயர்த்திக் கொண்ட என் பாசத்துக்குரிய பார்த்திபன்.. இனிய புத்தாண்டு இன்று தொடங்கும் ‘இரவின் நிழல்’ உலக விருதுகள் பல வென்றெடுத்து தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்ப்பாய் நிச்சயம். வாழ்த்துக்கள்.. இவன் கவிதைக்காக உங்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

More News

யாஷிகா-ரித்விகா இணையும் படத்தில் குத்துப்பாட்டு: பாடிய பிரபல இசையமைப்பாளர்!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகாவும், அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகாவும் இணைந்து நடிக்கும் படம் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'

விஜய்யின் 'மாஸ்டருக்கு' முன்பே வெளியான 'மாஸ்டர்கள்'

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் டைட்டில் 'மாஸ்டர்' என இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இத்தனைபேர் இருக்க எனக்கென்ன மனக்கவலை...? வைரமுத்து டுவீட்

சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்று கவியரசு வைரமுத்து அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக அறிவித்தது.

கொள்ளையடித்ததில் ரூ.20 லட்சம், போலீசாருக்கு லஞ்சமாக கொடுத்தேன்..! வங்கிக் கொள்ளையன் வாக்குமூலம்.

சுமார் 20 லட்ச ரூபாயை 2 போலீஸ்காரர்களுக்கு லஞ்சமாக கொடுத்ததாக கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தபட்ட 2 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் அரைநிர்வாண மர்ம நபர் யார்? சென்னையில் பரபரப்பு!

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அரை நிர்வாண மர்ம மனிதன் ஒருவன் பெண்களின் ஆடைகளை மட்டும் குறிவைத்து திருடி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது