அஜித்-பாலா பிரச்சனை: உண்மையில் என்ன தான் நடந்தது?

  • IndiaGlitz, [Sunday,April 19 2020]

’நான் கடவுள்’ படத்திற்காக இயக்குனர் பாலா தேசிய விருது பெற்றாலும், ’நான் கடவுள்’ என்றவுடன் அனைவருக்கும் பாலாவுக்கு அஜித்துக்கும் நடந்த சண்டை தான் ஞாபகம் வரும். இந்த படத்தில் ஆர்யா நடிப்பதற்கு முன்னர் அஜித் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே அஜித்துக்கும் பாலாவிற்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும் இது குறித்து நடந்த பஞ்சாயத்து ஒன்றில் அஜித்தை பாலா அடித்து விட்டதாகவும் கோலிவுட் திரையுலகில் பரவலாகக் கூறப்படும் வதந்திகளில் ஒன்று.

இந்த நிலையில் உண்மையில் அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார். பாலா மற்றும் அஜித்துக்கு இடையே நடந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை குறித்து ஒருசில சினிமா பிரபலங்கள் பஞ்சாயத்து செய்து வைத்ததாகவும், அந்த பஞ்சாயத்தின் போது அஜித்துக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் அதற்குரிய வட்டி பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று பாலா கூறியதாகவும், ஆனால் வட்டி கொடுக்க முடியாது வாங்கிய அட்வான்ஸ் மட்டுமே கொடுப்பேன் என்று அஜித் கூறியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இருவரும் கடுமையான வார்த்தைகளுடன் கூடிய வாக்குவாதங்கள் செய்ததாகவும் அதன் பின் அஜீத் கடும் கோபத்துடன் வட்டியையும் சேர்த்து தருகிறேன் என்று கூறிவிட்டு வேகமாக எழுந்து வெளியேறி விட்டதாகவும் பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

அஜித்தை அன்றைய தினம் பாலா அடித்ததாக கோலிவுட்டில் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும் அப்படி ஒரு சம்பவம் அன்றைய தினம் நடைபெறவில்லை என்றும் அந்த தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தூங்கும் தோனியிடம் ரொமான்ஸ் செய்யும் சாக்சி!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான

ஃபேஸ்புக் லைவ்வில் சர்ச்சை பேச்சு: சூர்யா பட நடிகர் கைது!

ஃபேஸ்புக் லைவ்வில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நடிகர் அஜாஸ்கான் என்பவர் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

செல்வராகவனுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்ட கீதாஞ்சலி

பிரபல இயக்குனர் செல்வராகவன் மீண்டும் தனது சகோதரர் தனுஷூடன் இணைந்து 'புதுப்பேட்டை 2' படத்தை இயக்கவுள்ளார் என்றும், இதுகுறித்த அறிவிப்பு கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்தவுடன்

சென்னை செய்தியாளர்கள் இருவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட உடன் பணிபுரிந்தவர்கள்!

நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வரும் பத்திரிக்கையாளர் ஒருவருக்கும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வரும் உதவி ஆசிரியர் ஒருவருக்கும் என ஒரே நாளில் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நோய்

விஜயகாந்துக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்த பிரேமலதா: வைரலாகும் வீடியோ

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், ஊரடங்கு உத்தரவு காரணமாக முடிவெட்டாமல், ஷேவ் செய்யாமல் இருந்ததை அடுத்து அவருடைய மனைவியே அவருக்கு முடிவெட்டி ஷேவ் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.