close
Choose your channels

அஜித்-பாலா பிரச்சனை: உண்மையில் என்ன தான் நடந்தது?

Sunday, April 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’நான் கடவுள்’ படத்திற்காக இயக்குனர் பாலா தேசிய விருது பெற்றாலும், ’நான் கடவுள்’ என்றவுடன் அனைவருக்கும் பாலாவுக்கு அஜித்துக்கும் நடந்த சண்டை தான் ஞாபகம் வரும். இந்த படத்தில் ஆர்யா நடிப்பதற்கு முன்னர் அஜித் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே அஜித்துக்கும் பாலாவிற்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும் இது குறித்து நடந்த பஞ்சாயத்து ஒன்றில் அஜித்தை பாலா அடித்து விட்டதாகவும் கோலிவுட் திரையுலகில் பரவலாகக் கூறப்படும் வதந்திகளில் ஒன்று.

இந்த நிலையில் உண்மையில் அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார். பாலா மற்றும் அஜித்துக்கு இடையே நடந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை குறித்து ஒருசில சினிமா பிரபலங்கள் பஞ்சாயத்து செய்து வைத்ததாகவும், அந்த பஞ்சாயத்தின் போது அஜித்துக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் அதற்குரிய வட்டி பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று பாலா கூறியதாகவும், ஆனால் வட்டி கொடுக்க முடியாது வாங்கிய அட்வான்ஸ் மட்டுமே கொடுப்பேன் என்று அஜித் கூறியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இருவரும் கடுமையான வார்த்தைகளுடன் கூடிய வாக்குவாதங்கள் செய்ததாகவும் அதன் பின் அஜீத் கடும் கோபத்துடன் வட்டியையும் சேர்த்து தருகிறேன் என்று கூறிவிட்டு வேகமாக எழுந்து வெளியேறி விட்டதாகவும் பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

அஜித்தை அன்றைய தினம் பாலா அடித்ததாக கோலிவுட்டில் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும் அப்படி ஒரு சம்பவம் அன்றைய தினம் நடைபெறவில்லை என்றும் அந்த தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.