close
Choose your channels

புது காதலிக்காக… மனைவியை கொன்று தந்தூரி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்ட கணவன்!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரேசில் நாட்டில் புதிதாகச் சந்தித்த தோழி ஒருவருக்காக தனது மனைவியை கொன்று தந்தூரி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்ட கணவன் சிறை தண்டனை பெற்றுள்ளார். ஆனாலும் சிறையில் இருந்து தப்பித்து அவர் செய்த காரியம் தற்போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரேசில் நாட்டில் வசித்துவந்த மௌரே சம்பீட்ரி என்ற 59 வயதான நபர் புதித்தாகச் சந்தித்த தனது தோழியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால் இதற்கு அவருடைய மனைவி Claudete sampietri தடையாக இருப்பாரோ என நினைத்த அவர் கடந்த 2017 இல் மனைவியைக் கொலைசெய்து வெளியே தெரியாமல் இருப்பதற்காக கூறுபோட்டு தந்தூரி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்டு இருக்கிறார்.

இதையடுத்து மனைவி காணாமல் போன வழக்கில் சிக்கிய மௌரேவிற்கு 21 வருட சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டு சோகத்தில் இருந்த மௌரே அங்கிருந்து தப்பித்து தனது காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார். இப்படியே காவல்துறையிடம் இருந்து தப்பித்து வாழ்ந்துவந்த மௌரே தற்போது 5 வருடம் கழித்து கடந்த மாதம் போலீசிடம் சிக்கியுள்ளார்.

காதலிக்காக கொலையும் செய்து , பின்னர் சிறையில் இருந்து தப்பித்து காதலியை கரம்பிடித்த மௌரேவைப் பார்த்து பலரும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதைத்தான் காதலுக்கு கண்ணில்லை என்பார்களோ? என்று கிண்டல் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.