வடிவேலு காமெடிக்கே டஃப்… 5 கணவன்களை உதறிவிட்டு… 6 ஆவது கணவருடன் காவல் நிலையம் வந்த பெண்!!!

  • IndiaGlitz, [Monday,August 31 2020]

 

அர்ஜுன் நடித்த மருதமலை படத்தில் போலீஸ் ஏட்டாக நடித்து இருக்கும் வைகைப் புயல் வடிவேலுவிடம் உதவிக்கேட்டு ஒரு பெண் காவல் நிலையத்திற்கு வருவார். வந்தவர் ஒரு வாலிபரைக் காட்டி நான் இவரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், பாதுகாப்பு தர வேண்டும் எனக் கோரிக்கை வைப்பார். திடீரென அந்தப் பெண்ணின் கணவர்கள் எனச் சொல்லிக்கொண்டு 5 பேர் அந்தக் காவல் நிலையத்திற்கு வரும் காட்சி இடம் பெற்றிருக்கும். இதைப் பார்த்த வடிவேலுக்குத் தலையே சுற்றிவிடும்.

அச்சு அசலாக அப்படியொரு காட்சிதான் தற்போது கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள கச்சினஹள்ளி எனும் கிராமத்தில் அரங்கேறி இருக்கிறது. நேற்று கச்சினஹள்ளியைச் சார்ந்த 22 வயது இளைஞன் சந்துரு, 38 வயதுடைய ஒரு பெண்ணுடன் காவல் நிலையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. வந்தவர் நானும் இந்தப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

சந்துரு அழைத்துக் கொண்டு வந்த 38 வயது பெண்ணைத் தேடி திடீரென 5 ஆண்கள் காவல் நிலையத்திற்கு வந்திருக்கின்றனர். மேலும் அங்குவந்த 5 பேரும் அந்தப் பெண்ணின் கணவர்கள் என்றும் எனது மனைவியை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் தன்னுடைய பெயர் பிரியா. நான் ஏற்கனவே 5 பேரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவர்களுடன் 2 குழந்தைகளும் பிறந்திருக்கிறது. தற்போது சந்துரு (22) வை காதலிக்கிறேன். நான் சந்துருவுடன் வாழ விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் செய்வதறியாது முழித்த காவல் துறையினர் கள்ளக்காதலில் இதுவும் ஒருவக,. உனக்கு இந்த விவகாரம் வேண்டாம், நீ சின்ன பையன் என சந்துருவுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர். ஆனால் சந்துரு காவல் துறையினரின் ஆலோசனையை சிறிதும் பொருட்படுத்துவதாக இல்லை. எனக்கு இந்தப் பெண்தான் வேண்டும். அவளுக்கு எத்தனை கல்யாணம் ஆகியிருந்தாலும் பரவாயில்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் அடுத்தக் கட்டமாக போலீஸ் சந்துருவின் அக்காவை அழைத்து விஷயத்தை தெரிவித்து இருக்கின்றனர். சந்துருவுக்கு அம்மா-அப்பா இல்லை என்பதும் அக்காவின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காவல் நிலையத்திற்கு வந்த சந்துருவின் அக்கா எவ்வளவோ எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் சந்துரு கொஞ்சமும் அசையாமல் எனக்கு இந்தப் பெண் வேண்டும் எனத் தொடர்ந்து கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணும் சந்துருவுடன் என்னை அனுப்பி வையுங்கள் எனக் கேட்டிருக்கிறார். இதனால் வேறுவழியில்லாமல் அப்பெண் மீது ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து வாங்காமல் 6 ஆவதாக திருமணம் செய்திருக்கிறார் என வழக்குத் தொடர்ந்து இருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சிக்கமகளூரு பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன்: விஷால்

பிரபல நடிகர் விஷாலின் பிறந்தநாள் முன் தினம்சிறப்பாக கொண்டாடப்பட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிரடி காட்டும் முதல்வர்!!! ரேஷன் பொருட்களை வீட்டுக்கே அனுப்ப புதியத் திட்டம்!!!

நியாய விலைக்கடைகளில்  வழங்கப்படும் பொருட்களை நேரடியாக பொது மக்களின் வீட்டிற்கே கொண்டுவரும் வகையிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என முதல்வர்

இன்னும் இருக்கு… சீனாவுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த பிளான்!!! என்ன தெரியுமா?

தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் கடந்த 2009 முதல் தீவிரம் அடைந்து வருகிறது.

இது தீப்பிடித்த காடு, பறவைகளே! பத்திரம்: ஊரடங்கு தளர்வு குறித்து வைரமுத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. பேருந்து

உயிரோட இருக்கணும் குமாரு.. அது மட்டும்தான் மேட்டரு: செல்வராகவனின் 'கொரோனா' பதிவு

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரனோ வைரஸ் பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்