அனுமதி மறுப்பு விவகாரம்.. வீடியோ வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்.!

  • IndiaGlitz, [Thursday,March 30 2023]

சென்னையில் உள்ள திரையரங்கில் இன்று சிம்பு நடித்த ‘பத்து தல’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு டிக்கெட் வைத்திருந்த இரண்டு நரிக்குறவர் சமூக ரசிகர்களை தியேட்டர் நிர்வாகம் உள்ளே விட மறுத்ததாக செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து ரசிகர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும் இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த திரையரங்கின் உரிமையாளர் தனது சமூக வலைதளத்தில் டிக்கெட் வைத்திருந்த நரிக்குறவ சமூக ரசிகர்கள் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் படம் பார்க்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து எந்த புகார்களும் வரவில்லை என்றாலும் செய்திகளின் அடிப்படையில் சென்னை உள்ள அந்த திரையரங்கில் கோயம்பேடு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் அவர்கள் நேரில் சென்று விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News

'அகிலன்' உள்பட 4 தமிழ் படங்கள், மொத்தம் 14 படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போலவே ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

நந்தினி எனக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர்: PS 2' இசை விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய்..!

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நந்தினி கேரக்டரில் நடித்த நடிகை ஐஸ்வர்யாராய் பேசியதாவது:

மணிரத்னம் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை: சியான் விக்ரம்

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் ஆதித்த கரிகாலம் கேரக்டரில் நடித்த நடிகர் சியான் விக்ரம் பேசியதாவது: 

'ரஜினி சார் சொன்னது எனக்கு அப்போது புரியவில்லை, இப்போது புரிகிறது: 'PS 2' இசை விழாவில் கார்த்தி..!

 'பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கார்த்தி பேசியதாவது:

'இந்த ராணி எப்போதுமே உங்களுக்குத்தான்; 'PS 2' இசை விழாவில் த்ரிஷா ..!

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் குந்தவை டைரக்டரில் நடித்த நடிகை த்ரிஷா பேசியதாவது: