அனுமதி மறுப்பு விவகாரம்.. வீடியோ வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்.!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சென்னையில் உள்ள திரையரங்கில் இன்று சிம்பு நடித்த ‘பத்து தல’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு டிக்கெட் வைத்திருந்த இரண்டு நரிக்குறவர் சமூக ரசிகர்களை தியேட்டர் நிர்வாகம் உள்ளே விட மறுத்ததாக செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து ரசிகர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும் இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த திரையரங்கின் உரிமையாளர் தனது சமூக வலைதளத்தில் டிக்கெட் வைத்திருந்த நரிக்குறவ சமூக ரசிகர்கள் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் படம் பார்க்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து எந்த புகார்களும் வரவில்லை என்றாலும் செய்திகளின் அடிப்படையில் சென்னை உள்ள அந்த திரையரங்கில் கோயம்பேடு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் அவர்கள் நேரில் சென்று விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments