தேன்மொழி சீரியல் நடிகர் கொலை: நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமா?

  • IndiaGlitz, [Monday,November 16 2020]

’கலக்கப்போவது யாரு’ புகழ் ஜாக்குலின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் தேன்மொழி என்ற சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் நேற்று சென்னையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த கொலை குறித்த காரணங்கள் தெரியவந்துள்ளது.

தேன்மொழி டிவி தொடரில் நடித்து வந்த செல்வரத்தினம் என்பவர் நேற்று எம்ஜிஆர் நகரில் உள்ள தனது வீட்டின் முன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென ஆட்டோவில் வந்த 4 பேர் அவரை சூழ்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கொலைக்கு ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட பிசினஸ் போட்டி காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கள்ளக்காதல் பிரச்சினை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

விருதுநகரை சேர்ந்த நண்பர் ஒருவரின் மனைவியிடம் செல்வரத்தினம் தொடர்பில் இருந்ததாகவும் இதனை அவரது நண்பர் பலமுறை கண்டித்தும் செல்வரத்தினம் கேட்காததால் அவர்தான் தனது ஆட்களுடன் வந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கள்ளக்காதல் காரணமாகத்தான் தேன்மொழி தொடரில் நடித்த செல்வரத்தினம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கண்ணை மறைக்கும் பாலாஜியின் காதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடக்கும் என்பது அறிந்ததே

என் வார்த்தையை நம்புங்கள், எந்த சேதமும் ஏற்படாது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவ மழை பெய்யும் போது கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சென்னை வெள்ளம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை காரணமாக

வருங்கால கணவருடன் தீபாவளி கொண்டாடிய விஜய்சேதுபதி பட நடிகை!

நடிகர் விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா. இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்தவர் மட்டுமின்றி

தீபாவளி கொண்டாடும் ரம்பாவின் க்யூட் குழந்தைகள்: வைரலாகும் வீடியோ!

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா என்பதும் அதன் பின்னர் அவர் கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு

பிக்பாஸ் லாஸ்லியா தந்தை திடீர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் என்பதும், கிட்டத்தட்ட கடந்த சீசனில் இறுதி வரை சென்ற போட்டியாளர்களில் ஒருவர் என்பதும் தெரிந்ததே