close
Choose your channels

தேன்மொழி சீரியல் நடிகர் கொலை: நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமா?

Monday, November 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கலக்கப்போவது யாரு’ புகழ் ஜாக்குலின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் தேன்மொழி என்ற சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் நேற்று சென்னையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த கொலை குறித்த காரணங்கள் தெரியவந்துள்ளது.

தேன்மொழி டிவி தொடரில் நடித்து வந்த செல்வரத்தினம் என்பவர் நேற்று எம்ஜிஆர் நகரில் உள்ள தனது வீட்டின் முன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென ஆட்டோவில் வந்த 4 பேர் அவரை சூழ்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கொலைக்கு ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட பிசினஸ் போட்டி காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கள்ளக்காதல் பிரச்சினை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

விருதுநகரை சேர்ந்த நண்பர் ஒருவரின் மனைவியிடம் செல்வரத்தினம் தொடர்பில் இருந்ததாகவும் இதனை அவரது நண்பர் பலமுறை கண்டித்தும் செல்வரத்தினம் கேட்காததால் அவர்தான் தனது ஆட்களுடன் வந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கள்ளக்காதல் காரணமாகத்தான் தேன்மொழி தொடரில் நடித்த செல்வரத்தினம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.