ரித்விகாவுடன் மோதும் ஐஸ்வர்யா? இந்த வாரமாவது மக்கள் சுதாரிப்பார்களா?

  • IndiaGlitz, [Monday,September 10 2018]

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் செண்ட்ராயன் வெளியேறியது கமல்ஹாசனுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் மிகுந்த மனவருத்தத்தை கொடுத்தது. பிக்பாஸ் வீட்டில் நீடிக்க தகுதி இல்லாத ஒருசிலர் இருக்கும் நிலையில் டைட்டில் வெல்லும் அனைத்து தகுதிகளும் உடைய செண்ட்ராயன் வெளியேறியது யாருக்கும் உடன்பாடு இல்லை.

இந்த நிலையில் இந்த வாரம் நேரடியாக ரித்விகா மட்டுமே நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரது நாமினேஷனுக்கு காரணமான மும்தாஜ் மீது சக போட்டியாளர்கள் ஆத்திரத்தில் இருப்பதால் மும்தாஜ் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் ஐஸ்வர்யாவும் நாமினேஷனில் இருக்க வேண்டும் என தனது ஆசை என கமல் தெரிவித்தார். நேற்று செண்ட்ராயன் வெளியேற்றப்படவுள்ளார் என்பதை கமல் கூறியபோது ஐஸ்வர்யா ஏதோ சொல்ல வந்தார். ஆனால் கமல், ஐஸ்வர்யாவை தடுத்து நிறுத்தி 'உட்காருங்கள்' என்று கோபமாக கூறிவிட்டார். கமல்ஹாசன் உள்பட அனைவருக்கும் ஐஸ்வர்யா வெளியேற வேண்டும் என்ற எண்ணமே உள்ளது.

கமல் வேண்டுகோளை ஏற்று ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டால் அவரை வெளியேற்ற மக்கள் தயாராகத்தான் உள்ளனர். ஆனால் பிக்பாஸ் கலர் கலராக ஒரு கிராஃபை காட்டி மீண்டும் ஒரு விளக்கத்தை கமல் மூலம் கூற வைத்து ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிடுவார் என்றே எண்ண தோன்றுகிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் நினைத்தவர்கள் வெளியேறவில்லை என்பதே உண்மை.

More News

டெல்லியில் அரசியல் சந்திப்பா? ரஜினி தரப்பு மறுப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது நடந்து வருகிறது.

'சென்னையில் ஓர் நாள்' படம் போல் ஒரு நிஜ சம்பவம்

'சென்னையில் ஓர் நாள்' படத்தில் சிக்னல்கள் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழிவிட்டது போல் கோவையில் நேற்று ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளது.

டாஸ்மாக் கடையை திறக்க பெண்கள் போராட்டம்: தமிழகத்தில் ஒரு விசித்திரம்

கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உண்மையில் ஐஸ்வர்யாவை மக்கள் தான் காப்பாற்றினார்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் பட்டியலில் இருந்த ஐஸ்வர்யா, மும்தாஜ், செண்ட்ராயன், விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் இருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக

நயன்தாரா மகளாக நடித்த பிரபல காமெடி நடிகரின் மகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.