close
Choose your channels

கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த மூன்று பிரபலங்கள் 

Tuesday, November 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'மக்கள் நீதி மையம்' என்ற கட்சியை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அக்கட்சி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் அக்கட்சியின் வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர்

இதனை அடுத்து கமலஹாசனுக்கு பிரச்சாரத்தில் கூடிய கூட்டம் வாக்காக மாறவில்லை என்று அக்கட்சியின் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியில் இருந்த மூன்று பிரபலங்கள் இன்று திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து உள்ளது அக்கட்சி தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணகிரி ஸ்ரீகாருண்யா, சிதம்பரம் ரவி , அரக்கோணம்
ராஜேந்திரன் ஆகிய மூவர் இன்று, முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக பிரமுகருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கமல் கட்சி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் டிடிவி தினகரன் கட்சி போலவே கமல் கட்சியில் இருந்து பிரமுகர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.