திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் கொலை: டிக்டாக் ஸ்டாரின் வெறிச்செயல்

  • IndiaGlitz, [Tuesday,June 23 2020]

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் மணமகளை வெறித்தனமாக கொலை செய்த டிக்டாக் ஸ்டார் ஒருவரால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசிதாபாத் என்ற பகுதியைச் சேர்ந்த நயினா கெளர் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மணமகள் நயினா கெளர் திடீரென மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்

இதனையடுத்து போலீசார் அதிரடியாக இதுகுறித்து விசாரணை செய்த போது டிக்டாக்கில் பிரபலமான ஒருவர் தனது நண்பர்களுடன் வந்து இந்த கொலையை செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்

இது குறித்த விசாரணையில் மணமகள் நயினா கெளரை ஒருதலையாக டிக்டாக் ஸ்டார் காதலித்ததாகவும், இந்த காதலுக்கு நயினா கெளர் மறுப்பு தெரிவித்ததால் திருமணத்திற்கு முந்தைய நாள் அவரை பழிவாங்கும் வகையில் கொலை செய்ததும் தெரியவந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் மணப்பெண் கொலை செய்யப்பட்டதால் இருவிட்டார்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

More News

2500ஐ தாண்டினாலும் நேற்றை விட குறைவு: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று 2710 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு என்றும் வெளிவந்த

ஏர் இந்திய விமானங்களுக்கு அமெரிக்காவில் தடை: புதிய சிக்கலில் மாட்டிக்கொண்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள்!!!

கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அடுக்கடுக்கான பிரச்சனையை சந்தித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா பாதிப்பு: மனைவிக்கும் பரவியதாக தகவல் 

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

8 வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவிட்டை டெலிட் செய்த அக்சயகுமார்: ஏன் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் எட்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவீட் ஒன்றை தற்போது டெலிட் செய்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

பிறந்த நாள் விழாவில் பிரியாணியும் கொரோனாவும் பரிமாறிய அரசியல் பிரமுகர்

அரசியல் பிரமுகர் ஒருவர் தனது பிறந்த நாள் விழாவில் பிரியாணியை மட்டுமின்றி கொரோனாவையும் சேர்த்து பரிமாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது