பதவியில் இருந்து திடீரென விலகியது ஏன்? திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பதவியை திடீரென திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா செய்த நிலையில் அது குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தனது சொந்த வேலை காரணமாக சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் இதுவரை தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் சுப்ரமணியன் அவர்களுக்கு சொந்தமான திரையரங்கில் தீபாவளி அன்று அரசின் அனுமதி இன்றி அதிகாலை காட்சி திரையிடப்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விதிகளை மீறி இந்தி திரைப்பட சிறப்பு காட்சி திரையிட்டது தவறுதான் என்றும் விதிமுறைகள் இந்தி படத்திற்கு பொருந்தாது என நினைத்து சிறப்பு காட்சியை ஒளிபரப்பிவிட்டனர் என்றும் சாதாரண விஷயத்தை பெரிது படுத்தியதால் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் என்றும் தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments