சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் நிறைவேற்றம்

  • IndiaGlitz, [Monday,January 23 2017]

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உறுதி செய்யும் அவசரச் சட்ட முன் வடிவு மசோதா சட்டமாக சற்று முன் நிறைவேற்றப்பட்டது. இதனால் இனிமேல் ஜல்லிகட்டு நடத்துவதற்கான தடை முற்றிலும் நீங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன் வடிவை சட்டமாக நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த ஆவண செய்யும் அவசரச் சட்டத்தின் முன் வடிவு நகலை தாக்கல் செய்தார்.

பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் ஜல்லிக்கட்டு நடத்த உறுதி செய்யும் தமிழக அரசின் அவசரச்சட்டத்தின் முன் வடிவு நிரந்தரச் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டுக்காக விலங்குகள் வதைத்தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதால், விலங்குகள் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் அதிகாரபூர்வமாக நீக்கப்படுகின்றது.

தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்ட முன்வடிஐ திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன. இந்த சட்ட முன் வடிவு குறித்து முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பேசினர்,. இதனையடுத்து அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த சட்ட முன் வடிவு சட்டமாக நிறைவேறியது.

More News

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது...

பிரதமர், முதல்வரிடம் பேசியுள்ளேன். பொறுமை காக்கவும். கமல்ஹாசன்

ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்து வரும் நிலையில் அவ்வப்போது தமது ஆதரவை போராட்டக்காரர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்ததோடு, போராட்டம் அறவழியில் சென்று கொண்டிருந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்ததே...

போராட்டத்தை கைவிடுவது எப்போது? லாரன்ஸ் முன்னிலையில் மாணவர்கள் தகவல்

சென்னை மெரீனாவில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தாலும், ஒருசில மாணவர்கள் கடல் அருகே சென்று போராட்டம் செய்து வருகின்றனர்

போராட்டம் முடிந்தது. தயவுசெய்து வீட்டுக்கு செல்லுங்கள். மாணவர்களுக்கு ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்

கடந்த ஒரு வாரமாக அமைதியாக நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டம் துரதிஷ்டவசமாக வன்முறையாக மாறிவிட்டது...

இது வீரத்தை காட்டும் நேரம் அல்ல. மாணவர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

கடந்த ஒரு வாரமாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி தனது வீட்டின் முன் இரவுபகல் பாராது அமைதியாக சிம்பு போராடினார் என்பதும் அனைவரும் அறிந்ததே...