close
Choose your channels

பிரதமர், முதல்வரிடம் பேசியுள்ளேன். பொறுமை காக்கவும். கமல்ஹாசன்

Monday, January 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்து வரும் நிலையில் அவ்வப்போது தமது ஆதரவை போராட்டக்காரர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்ததோடு, போராட்டம் அறவழியில் சென்று கொண்டிருந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்ததே.

அதேநேரம் இந்த போராட்டம் வன்முறையாக மாறியபோது பதறியடித்து அமைதியாக இருங்கள் என்று அறிவுரையும் கூறினார். மேலும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து இந்திய பிரதமரிடமும், தமிழக முதல்வரிடமும் தான் பேசியுள்ளதாகவும் இதுகுறித்து நல்ல பதில் விரைவில் வரும் என்றும் எனவே மாணவர்கள் அமைதியாக பொறுமையாக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய, மாநில அரசு உங்களை திருப்திபடுத்த தயாராகவுள்ளதாகவும், இந்த விஷயத்தில் பொறுமை மிக அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்,.

மேலும் தமிழகத்தின் பிற பகுதியிலும் மெரீனாவிலும் அமைதியான வழியில் போராடிய போராட்டக்காரகள் மீது எந்தவிதமான தாக்குதல் நடவடிக்கையையும் போலீசார் எடுக்க அனுமதிக்க கூடாது என்று காவல்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்ட கமல், விரைவில் முதல்வர் இதற்கான நல்ல முடிவை சட்டமன்றத்தில் அறிவிப்பார் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.