கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,July 23 2020]

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளித்தேர்வுகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் கல்லூரிகளில் இன்னும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதால் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது

இந்த நிலையில் இந்த கோரிக்கைகளை பரிசீலித்த முதல்வர் பழனிசாமி இன்று இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது.

* மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC)மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி,

* முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் (Bachelor Degree Arts and Scince) மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு (Polytechnic Diploma) பயிலும் மாணாக்கர்களுக்கும்,

* முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், (Master Degree First Year)

* இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் (BE)

* முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், (ME)
அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்

இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த அறிக்கையின்படி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து என்பது உறுதியாகியுள்ளது

More News

மேலும் ஒரு தமிழக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 18 ஆனதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒருசில அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

சூர்யாதேவி திடீர் கைதா? தனியாக தவிக்கும் குழந்தைகள்

வனிதா திருமணம் பிரச்சனையில் அவ்வப்போது காரசாரமான வீடியோக்களை பதிவு செய்து வந்த சூர்யாதேவி, ஊடகங்களிலும் இதுகுறித்த விவாதங்களில் கலந்து கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்

தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து தற்கொலை செய்த இளைஞர்!

புதுக்கோட்டை அருகே 19 வயது இளைஞர் ஒருவர் தனக்குத்தானே கண்ணீர் போஸ்டர் டிசைன் செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சோனியா அகர்வாலுக்கு திருமணமா? வைரலாகும் வீடியோ

கடந்த 2002ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'காதல் கொண்டேன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.

இணையத்தில் வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவரான ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'படையப்பா' திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கேரக்டரில்