close
Choose your channels

என் அம்மாவை இப்படி பேசிவிட்டார்களே: கண்கலங்கிய தமிழக முதல்வர்!

Monday, March 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்பி ஆ ராசா பேசியதாக கூறப்படும் நிலையில் ’என் அம்மாவை எப்படி பேசி விட்டார்களே’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கண்ணீருடன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக எம்பி ஆ ராசா, ஸ்டாலின் பிறப்பு குறித்தும் முதல்வர் பிறப்பு குறித்தும் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இதனை அடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வந்தது

இந்த நிலையில் சென்னையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து கூறியபோது ’என்னுடைய அம்மாவை இப்படி பேசி விட்டார்களே, அம்மா என்பது ஒவ்வொருவருக்கும் உயர்வானவர். முதலமைச்சரின் அம்மாவையே இப்படி பேசுகிறவர்கள், நாளை ஆட்சிக்கு வந்தால் மற்ற பெண்களின் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். அவர் இவ்வாறு பேசியதற்கு கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார் என்று கண்கலங்கி கண்ணீருடன் பேசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து ஆ ராசா விளக்கம் அளிக்கையில்,ம் ‘தான் இயல்பாக பேசியதை திரித்து பரப்பி வருவதாகவும், தனது பேச்சை வெட்டி அவதூறாக பரப்பி வருவதாகவும் முதல்வர் தாயார் குறித்து தான் எந்தவிதமான அவதூறு செய்யும் வகையில் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆ ராசா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.