close
Choose your channels

ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தைக்கு உதவி செய்த தமிழக முதல்வர்

Sunday, April 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மிகவும் எளிமையானவர் என்றும் சாதாரணமானவர்கள் கூட மிக எளிதாக அவரை அணுகும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை ஒன்றுக்கு தமிழக முதல்வர் உதவி செய்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

தென்காசியை சேர்ந்த குழந்தை ஒன்று ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை மூலம் மருந்துகள் பெற்று அந்த குழந்தைக்கு கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்போது மருந்து தீர்ந்து விட்டதால் இப்போது உள்ள சூழ்நிலையில் அந்த குழந்தைக்கு தேவையான மருந்துகளை சென்னைக்கு சென்று சிறுமியின் பெற்றோரால் வாங்க முடியவில்லை என்றும் எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு அந்த குழந்தையின் பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் சமூகவலைதளத்தில் ஒருவர் குழந்தையின் புகைப்படம் மற்றும் மருத்துவ குறிப்புகளுடன் ஒரு பதிவைப் செய்து அதனை முதல்வரின் டுவிட்டர் பக்கத்திற்கு டேக் செய்திருந்தார்.

இந்த பதிவை பார்த்து உடனடியாக பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’இந்த சின்னஞ்சிறு வயதிலேயே நோயை எதிர்த்துப் போராடும் இந்த குழந்தை விரைவில் பூரண குணமடைந்து நலம் பெற நலம் பெற வேண்டி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த குழந்தைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் பதிவாகும் ஒவ்வொரு தகவலுக்கும் உடனடியாக பதிலளிப்பதோடு, தகுந்த நடவடிக்கையும் எடுத்து வரும் தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.