ஆகஸ்ட் 10 முதல் ஜிம்கள் திறக்க முதல்வர் உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே.

அவற்றின் ஒரு தளர்வாக ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ஜிம்களை திறக்கலாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். ஜிம் உரிமையாளர்களின் வேண்டுகோளை அடுத்தே முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

50 வயதுக்கு மேற்பட்டோரையும்‌, 15 வயதுக்கு குறைவான சிறுவர்களையும்‌ அனுமதிக்க கூடாது என கட்டுப்பாடு

முழுமுகக்கவசம்‌ அணிந்து வருபவர்களை மட்டும்‌ உடற்பயிற்சி கூடத்திற்குள்‌ அனுமதிக்குமாறு உத்தரவு

என்‌-95 உள்ளிட்ட மூக்கு மற்றும்‌ வாயை மூடும்‌ முகக்கவசங்களை அணியக்‌ கூடாது என அறிவுறுத்த வேண்டும். மூக்கு மற்றும்‌ வாயை மூடும்‌ முகக்கவசத்தை அணிந்தால்‌ உடற்பயிற்சியின்போது மூச்சுத்‌திணறல்‌ ஏற்பட வாய்ப்பு உருவாகும்‌ என எச்சரிக்கை

ஜிம்‌.களில்‌ குறைந்த அளவில்‌ உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்‌

தனிநபர்‌ இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்‌

இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையிடம் 1000 ரூபாய் கடன் கேட்ட ரசிகர்

வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு ரசிகர் ஒருவர் அதிர்ச்சி தந்துள்ளார் 

மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பிபியின் உடல்நிலை: தனியார் மருத்துவமனை அறிக்கை

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு லேசா கொரனோ தொற்று இருந்ததாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான செய்தியை பார்த்தோம்.

'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.1 கோடி: கமல் வழங்கினார்.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'இந்தியன் 2'.

தாலி கட்டிய சில நிமிடங்களில் தற்கொலை: 19 வயது காதல் ஜோடியின் விபரீத முடிவு

தாலி கட்டிய சில நிமிடங்களில் 19 வயது காதல் ஜோடி கோவில் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது