close
Choose your channels

ஆகஸ்ட் 10 முதல் ஜிம்கள் திறக்க முதல்வர் உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

Thursday, August 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே.

அவற்றின் ஒரு தளர்வாக ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ஜிம்களை திறக்கலாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். ஜிம் உரிமையாளர்களின் வேண்டுகோளை அடுத்தே முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

50 வயதுக்கு மேற்பட்டோரையும்‌, 15 வயதுக்கு குறைவான சிறுவர்களையும்‌ அனுமதிக்க கூடாது என கட்டுப்பாடு

முழுமுகக்கவசம்‌ அணிந்து வருபவர்களை மட்டும்‌ உடற்பயிற்சி கூடத்திற்குள்‌ அனுமதிக்குமாறு உத்தரவு

என்‌-95 உள்ளிட்ட மூக்கு மற்றும்‌ வாயை மூடும்‌ முகக்கவசங்களை அணியக்‌ கூடாது என அறிவுறுத்த வேண்டும். மூக்கு மற்றும்‌ வாயை மூடும்‌ முகக்கவசத்தை அணிந்தால்‌ உடற்பயிற்சியின்போது மூச்சுத்‌திணறல்‌ ஏற்பட வாய்ப்பு உருவாகும்‌ என எச்சரிக்கை

ஜிம்‌.களில்‌ குறைந்த அளவில்‌ உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்‌

தனிநபர்‌ இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்‌

இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.