சென்னை தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து: அதிர்ச்சி காரணம்

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது. அதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 ஆகவும், அதிக பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயம் சிகிச்சை கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசும் தனியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி பொது வார்டில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 5,000 முதல் 7,000 ரூபாய் கட்டணமும், தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு தினமும் ரூபாய் 15,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாக ஒருசில தனியார் மருத்துவமனை மீது குற்றஞ்சாட்டப்பட்டு சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு நோயாளி ஒருவரிடம் 19 நாளுக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த தனியார் மருத்துவமனை மீது தமிழக சுகாதார துறை நடவடிக்கை எடுத்து கொரோனா சிகிச்சைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது. மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது
 

More News

ஸ்மார்ட்போன் கூட வாங்க முடியாத மாணவிக்கு ஐபோன் அனுப்பிய தமிழ் நடிகை!

நீட் தேர்வுக்கு தயார் செய்ய ஸ்மார்ட்போன் கூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்ட மாணவி ஒருவருக்கு தமிழ் நடிகை ஒருவர் ஐபோன் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடுவானில் மோதிக்கொண்ட இரு விமானங்கள்… 7 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அம்மாகாண உறுப்பினர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

போதையில் தாய்ப்பால் கொடுத்ததால் இறந்த குழந்தை: நீதிமன்றத்தின் வினோதமான தீர்ப்பு

பீர் குடித்துவிட்டு போதையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தை இறந்த வழக்கில் 20 வருட சிறை தண்டனை பெற்ற பெண், மேல் முறையீட்டு மனு செய்திருந்த

ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டரை ஹேக் செய்தது ஒரு சிறுவனா??? தொடரும் பரபரப்பு!!!

கடந்த மாதம் 24 ஆம் தேதியன்று பிற்பகலில் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

'சின்ன வயசிலேயே நான் பெரிய பையன்': வைரலாகும் பிரபல இயக்குனரின் சிறுவயது புகைப்படம்!

'சின்ன வயசுலயே நான் பெரிய பையன்' என்ற கேப்ஷனுடன் பிரபல இயக்குனர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது