close
Choose your channels

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 9 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

Tuesday, May 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய பாதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இதன்படி இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 என்றும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,728 என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 646 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 509 பேர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,634 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

மேலும் இன்று கொரோனா தொற்றால் 9 பேர்கள் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 127ஆக உயர்ந்துள்ளது. இன்று 9 பேர் பலி என்பது இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் அதிகபட்ச உயிர்ப்பலி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கொரோனாவில் இருந்து 611 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும். இதனையடுத்து கொரோனாவால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,342 ஆக உயர்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.