சர்வே ரிப்போர்ட்டில் வெற்றி வாகை சூடிய அதிமுக… பரபரப்பு தகவல்!

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று ஜனநாயக கூட்டமைப்பு (Democracy Network) மற்றும் உங்கள் குரல் அமைப்பின் கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. இந்த அமைப்பு தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு உள்ள கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு உள்ளது. இதற்காக மார்ச் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த முடிவுகள் மண்டல வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் அதிமுக கூட்டணி கொங்குமண்டல்-40, தொண்டை மண்டலம்-34 உடன் 8, சோழ மண்டலம்-20, பாண்டிய மண்டலம்-20 எனவும் திமுக கூட்டணி – கொங்கு மண்டலம்-28, தொண்டை மண்டலம் 24 உடன் 12, சோழ மண்டலம்-21, பாண்டிய மண்டலம்-26 எனவும் அமமுக கூட்டணி-1 முன்னிலை பெற்று இருக்கின்றன.

மேலும் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் விவசாயியாக பார்ப்பதும் அதிமுக கூட்டணிக்கு அதிக வாக்குகளை பெற்று தருவதாக சர்வே முடிவு கணித்து இருக்கிறது. அதோடு அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாகவும் சர்வே ரிப்போர்ட் கூறியுள்ளது.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு, தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் மாற்றம் ஆகியவை அதிமுக கூட்டணி கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருப்பதாகவும் தொண்டை மண்டலத்தில் கூட்டணி கட்சிகள் பலவும் அதிமுகவிற்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணி வாக்குகளை வெகுவாக பாதிப்படைய செய்யும் எனவும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 முனை போட்டி நிலவி வருகிறது. இத்தகைய கடும் போராட்டத்திற்கு இடையில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என சர்வே முடிவு தெரிவித்து இருப்பது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் 40 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட கமல்-ரஜினி பட நாயகி!

கமலஹாசன் நடித்த 'சகலகலா வல்லவன்', 'காதல் பரிசு' உட்பட பல படங்களிலும், ரஜினிகாந்த் நடித்த 'எங்கேயோ கேட்ட குரல்' 'மாவீரன்' உள்பட பல படங்களிலும், நடித்தவர் நடிகை அம்பிகா.

மீண்டும் தொடங்கியது 'அண்ணாத்த' படப்பிடிப்பு: கலந்து கொண்டவர்கள் யார் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.

நீருக்கு அடியில் பிகினி… பாலிவுட் நடிகையின் அசர வைக்கும் வைரல் புகைப்படம்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட்.

பாலிவுட் படத்தின் விஜய்சேதுபதியின் ஸ்டைலிஷ் லுக்: வைரல் புகைப்படம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே