மே மாத மின்சார ரீடிங் எப்படி எடுப்பது? மின்வாரியம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

மே மாதத்திற்கான மின்சார ரீடிங்கை மின் நுகர்வோரே எடுக்கலாம் என மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது முந்தைய மாத கட்டணத்தையே கட்டும்படி மின்சார வாரியம் அறிவுறுத்தி இருந்தது. அதன் பிறகு மொத்தமாக ரீடிங் எடுக்கப்பட்ட போது அதிக கட்டணம் வந்ததாக பலரும் சர்ச்சையில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மே மாதத்திற்கான மின்சார ரீடிங் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் முந்தைய மாத கட்டணத்தை கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் மின்சார வாரியம் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரிடம் மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்களின் மின்மீட்டரில் உள்ள அளவை புகைப்படமாக எடுத்து அதனை மின்வாரிய உதவி பொறியாளருக்கு அனுப்பி வைத்து அதற்குரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த அறிவிப்பு எந்த அளவுக்கு நடைமுறையில் ஒத்துவரும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கண்மணிகளை காப்பாற்றுங்கள்: தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்ஹாசன்!

கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெற்றோர்களின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்

தமிழில் படிக்க வேண்டிய சிறந்த சரித்திர நாவல்கள்!

நாவல் இலக்கியத்தில் சரித்திர நாவல்களுக்கு ஒரு பெரிய மவுசு இருக்கத்தான் செய்கிறது.

வந்தாச்சு கொரோனா சுய பரிசோதனை கிட்....! ஒப்புதல் அளித்த ஐசிஎம்ஆர்...!

கொரோனா தொற்று உள்ளதா என வீட்டிலேயே தெரிந்துகொள்ள கோவிசெல்ஃப்டிஎம் என்ற, சுய பரிசோதனை

தடுப்பூசி போட்டும் கொரோனா வருதே? அப்போ தடுப்பூசி அவசியமா? பளீர் பதில்கள்!

பொதுவா வருமுன் காப்போம் என்ற அடிப்படையில்தான் தடுப்பூசிகள் போடப்படுகிறது.

இந்த க்யூட் குட்டிப்பாப்பா தான் இன்றைய பிரபல நடிகை: யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை எடுத்து திரையுலக பிரபலங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பிசியாக உள்ளனர்.