சுறா மீன் தாக்கியதால் கையை இழந்த 12 வயது சிறுவன்! அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

உக்ரைன் நாட்டில் சுறா மீன் தாக்கியதால் 12 வயது சிறுவன் கையை இழந்ததாகவும், கைடு ஒருவருக்கு கால் சேதமடைந்ததாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் பெண் மற்றும் அவரது 12 வயது மகன் ஆகிய இருவரும் எகிப்து நாட்டிற்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் அவர்களுக்கு கைடு ஒருவர் பல பகுதிகளை சுற்றி காண்பித்துள்ளார். அந்த வகையில் கடல் ஒன்றுக்கு சென்றிருந்தபோது திடீரென 2 மீட்டர் சுறா ஒன்று அவர்களை தாக்கியது. இதில் சிறுவனின் கை முற்றிலும் சேதமடைந்ததாகவும்,  கைடின் கால் பலத்த சேதமடைந்ததாகவும் தெரிகிறது. மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும் சிறுவனின் கையை ஒட்ட வைக்கமுடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறுவனின் தாயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2010ஆம் ஆண்டு இதே இடத்தில் தான் சுறாமீன் தாக்கியதில் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஷிவானிக்கு பதிலாக வைரலாகும் அவரது அம்மாவின் புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன், நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து பேசாமல் மௌனமாக இருந்தார். அதன் பின்னர் இரண்டாவது வாரம் முதல் ரம்யா, கேப்ரில்லா, சம்யுக்தா

மிரட்டல் விவகாரம்: சீனுராமசாமியின் முக்கிய கோரிக்கை!

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இன்று காலை திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் அய்யா தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார்.

நிலமோசடி விவகாரம்: சூரியின் அடுத்தகட்ட நடவடிக்கை

சமீபத்தில் நடிகர் சூரி, பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது நில மோசடி புகார் கொடுத்தார் என்பதும்

தமிழக ரசிகருக்காக கடலூர் வருவாரா தல தோனி?

தமிழகத்தைச் சேர்ந்த தீவிரமான ரசிகர் ஒருவர் தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறமாக மாற்றினார் என்றும், தனது வீட்டின் சுவரில் தோனியின் புகைப்படங்களை வரைந்தார்

ஒரே நாளில் வெளியான விஷாலின் மூன்று படங்கள் குறித்த அப்டேட்!

விஷால் நடித்த 'சக்ரா', துப்பறிவாளன் 2 ' மற்றும் ஆர்யாவுடன் அவர் நடிக்கும் படம் என மூன்று படங்களின் அப்டேட்டுக்கள் ஒரே நாளில் வெளிவந்திருப்பது விஷால் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது