close
Choose your channels

சுறா மீன் தாக்கியதால் கையை இழந்த 12 வயது சிறுவன்! அதிர்ச்சி தகவல்

Wednesday, October 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உக்ரைன் நாட்டில் சுறா மீன் தாக்கியதால் 12 வயது சிறுவன் கையை இழந்ததாகவும், கைடு ஒருவருக்கு கால் சேதமடைந்ததாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் பெண் மற்றும் அவரது 12 வயது மகன் ஆகிய இருவரும் எகிப்து நாட்டிற்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் அவர்களுக்கு கைடு ஒருவர் பல பகுதிகளை சுற்றி காண்பித்துள்ளார். அந்த வகையில் கடல் ஒன்றுக்கு சென்றிருந்தபோது திடீரென 2 மீட்டர் சுறா ஒன்று அவர்களை தாக்கியது. இதில் சிறுவனின் கை முற்றிலும் சேதமடைந்ததாகவும்,  கைடின் கால் பலத்த சேதமடைந்ததாகவும் தெரிகிறது. மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும் சிறுவனின் கையை ஒட்ட வைக்கமுடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறுவனின் தாயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2010ஆம் ஆண்டு இதே இடத்தில் தான் சுறாமீன் தாக்கியதில் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.