பொதுவெளியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறிய ஒரே அதிபர்… ஆதிர்ச்சி தகவல்!

 

சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாத அதிபர் என்றால் அது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான். இப்படி இருக்கும்போது அவர் பொதுவெளியில் கூறிய பொய்கள் எத்தனை என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த ஆய்வில் நடத்தப்பட்ட கூற்றுகளின் அடிப்படையில் அவர் 30 ஆயிரத்து 573 பொய்களை சொல்லி இருக்கிறார் என்று வாஷிங்டன் போஸ்ட் ஃபேக்ட் செக்கர் குழு தெரிவித்து இருக்கிறது. இந்தத் தகவல் அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் டிரம்ப் தான் பதவி ஏற்றுக்கொண்ட முதல் 100 நாட்களில் கிட்டத்தட்ட 492 உறுதிச் செய்ப்படாத தகவல்களை கூறி இருக்கிறார் என்றும் அது அவருடைய ஆட்சிக்காலத்தின் முடிவில் 30 ஆயிரத்து 573 ஆக அதிகரித்து உள்ளது என்றும் அந்தக் குழு தெரிவித்து இருக்கிறது. டைம் இதழ் நடத்திய மற்றொரு ஆய்வில் உலக அதிபர்களிலேயே பொதுவெளியில் அதிகமாக தோன்றிய அதிபரும் டொனால்ட் டிரம்ப் என்பதும் தெரியவந்துள்ளது.

இப்படி பொதுவெளியில் அடிக்கடி தோன்ற ஆரம்பித்த டிரம்ப் அவருடைய பதவிக் காலத்தின் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 6 தவறான தகவல்களைக் கூறி இருக்கிறார். அதுவே பதவி காலத்தின் முதல் வருடத்தில் 16 ஆகவும் இரண்டாவது வருடத்தில் 22 ஆகவும் இறுதி வருடத்தில் 39 ஆகவும் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. மேலும் இவர் கூறும் தவறான தகவல்கள் அனைத்தும் டிவிட்டர் வாயிலாக பதவிடப்பட்டு இருக்கிறது. இப்படி பதிவிடப்பட்ட அனைத்து தகவல்களையும் டிவிட்டர் நிறுவனம் உடனுக்குடனே அழித்தும் நமக்குத் தெரிந்த கதைதான்.

அதோடு தான் வரிகளை அதிகமாக குறைத்த அதிபர், கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை சரி கட்டியவர் என்றும் தன்னைப் பற்றியே அடிக்கடி பொதுவெளியில் கூறிக்கொண்டு இருக்கிறார். அதோடு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தமைக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாதான் காரணம் என டிரம்ப் கூறியது பலரையும் மலைக்க வைத்து இருக்கிறது. அதாவது ஒபாமா ஆட்சி நிர்வாகத்தில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தது. இந்தக் காரணத்தினால்தான் அமெரிக்காவில் கொரோனா அதிகரித்து உள்ளது என்றும் டிரம்ப் பேசி இருக்கிறார். இப்படி ஒட்டுமொத்தமாக அவர் கூறிய தவறான தகவல்களின் எண்ணிக்கை 30,573 எனத் தெரியவந்துள்ளது.

More News

மகள்களை நரபலி கொடுத்துவிட்டு 'உயிர்த்தெழுவார்கள்' என நம்பிய பேராசிரியர்! அதிர்ச்சி சம்பவம்!

கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ஒரு தம்பதியினர் தங்கள் பெற்ற மகள்களை அடித்து கொலை செய்துவிட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து அற்புதம் விளைவிப்பார்கள் என்று நம்பிய சம்பவம் ஒன்று

'வலிமை' தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடும் டீசர்!

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது

விஜய்சேதுபதி பட இசையமப்பாளருக்கு திருமணம்: வாழ்த்து கூறிய திரையுலகினர்!

விஜய்சேதுபதி நடித்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவருக்கு திருமணம் நடந்ததை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

அருண்விஜய்யின் அடுத்த படத்தில் நாயகியாகும் முன்னணி நடிகை!

அருண் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நாயகியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

உன்னை நினைத்தால் பெருமையா இருக்குடா: சோம் வீடியோவுக்கு 'பிகில்' நடிகையின் கமெண்ட்!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் பிக்பாஸ் சோம்சேகர் பதிவு செய்த வீடியோவுக்கு 'உன்னை நினைத்தால் பெருமையா இருக்குடா'