close
Choose your channels

அருண்விஜய்யின் அடுத்த படத்தில் நாயகியாகும் முன்னணி நடிகை!

Monday, January 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நாயகியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதல்கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாகவும், அருண் விஜய் ஜோடியாகவும் நடிக்க பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இந்த பேச்சுவார்த்தை முடிந்து தற்போது அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

அதிரடி ஆக்ஷன் படமான அருண் விஜய் நடிக்க இருக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் இணைந்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே அருண்விஜய் நடித்த ‘மாஃபியா’ படத்தில் ப்ரியா பவானிசங்கர் நடித்த நிலையில் மீண்டும் அவருடன் இந்த படத்தின் மூலம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் ப்ரியா பவானிசங்கர், சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’ மற்றும் சிம்பு நடிக்கும் ’பத்து தல’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.