ஆர்.கே.நகர் அதிமுக சசிகலா அணி வேட்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 15 2017]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக சசிகலா அணியின் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் கடந்த சில நாட்களாக எழுந்து வந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ வேட்பாளராக அந்த கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால், முதலமைச்சராகும் எண்ணமில்லை என்றும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடருவார் என்றும் உறுதி கூறினார்.
மேலும் இந்த தொகுதியில் ஜெயலலிதாவின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த தொகுதியில் போட்டியிட வரும் 23ஆம் தேதி மனுதாக்கல் செய்ய போவதாகவும், இந்த தொகுதியில் தனக்கு நல்ல ஆதரவு இருப்பதால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் அவர் தெரிவித்தார்

More News

'பாகுபலி 2' டிரைலர் ரன்னிங் டைம்

இந்தியாவின் பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி 2' திரைப்படத்தினை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மார்ச் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டிரைலர் தற்போது சென்சார் செய்யப்பட்டு&#

விவேகம்' படப்பிடிப்பிற்காக பல்கேரியா கிளம்பினார் தல அஜித்.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் பிரமாண்டமான திரைப்படமான 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஏற்கனவே படக்குழுவினர் பல்கேரியா சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்றிரவு அஜித்தும் பல்கேரியா கிளம்பியுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்...

விஜய்சேதுபதியின் 'கவண்' சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி

விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

விஸ்வரூபம்' விஷயத்தில் நன்றி மறந்துவிட்டார் கமல். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் ஆவேசமாக கருத்துக்கள் ஒருசில அரசியல்வாதிகளை எரிச்சல் அடைய செய்துள்ளன. பெருவாரியான பொதுமக்களின் எண்ணங்களையே அவர் பிரதிபலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் மீது பதில் தாக்குதல், போலீஸ் புகார் உட்பட அரசியல்வாதிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித

ரஜினி, கமல் பட நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின்கபூர் நேற்றிரவு திடீரென அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...