close
Choose your channels

ஆர்.கே.நகர் அதிமுக சசிகலா அணி வேட்பாளர் அறிவிப்பு

Wednesday, March 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக சசிகலா அணியின் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் கடந்த சில நாட்களாக எழுந்து வந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ வேட்பாளராக அந்த கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால், முதலமைச்சராகும் எண்ணமில்லை என்றும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடருவார் என்றும் உறுதி கூறினார்.
மேலும் இந்த தொகுதியில் ஜெயலலிதாவின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த தொகுதியில் போட்டியிட வரும் 23ஆம் தேதி மனுதாக்கல் செய்ய போவதாகவும், இந்த தொகுதியில் தனக்கு நல்ல ஆதரவு இருப்பதால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் அவர் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.