தூத்துகுடி துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

  • IndiaGlitz, [Tuesday,May 22 2018]

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடந்து வரும் நிலையில் இன்றைய போராட்டம் வன்முறையாக வெடித்து பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தடியடி, கண்ணீர்ப்புகை ஆகியவை பயனளிக்காததால், போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் முதல்கட்டமாக ஒருவர் மட்டுமே பலியானதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் தற்போது இந்த துப்பாக்கி சூட்டால் மூன்று பேர் பலியாகியிருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது. மரணம் அடைந்த ஒருவரின் பெயர் அந்தோணி என்றும், மற்ற இரண்டு பேர்களின் விபரங்கள் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவ வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துல்ள்ளது. ஆனால் சற்றுமுன் பேட்டியளித்த டிஜிபி ராஜேந்திரன், 'தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

More News

டிஜிட்டல் நிறுவனங்கள் சின்ன படங்களுக்கு கிடைத்த வரம்: பிரபல நடிகர்

கோலிவுட் திரையுலகில் சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சரியான தேதி கிடைப்பதில்லை,

கலவர பூமியாக மாறிய தூத்துகுடி: முதல்வர் அவசர ஆலோசனை

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 99 நாட்களாக போராடி வரும் நிலையில் இன்று 100வது நாளில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர்.

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலியானதால் பதட்டம்

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்

'தளபதி 62' படத்திற்காக தயாராகும் பிரமாண்டமான அரசியல் கட்-அவுட்டுக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றது.

'சாமி 2' படத்தில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத்

சீயான் விக்ரம், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.